மஜக நிர்வாகி கொல்லப்பட்ட சம்பவம் - தஞ்சை நீதிமன்றத்தில் 6 பேர் சரண்

மஜக நிர்வாகி கொல்லப்பட்ட சம்பவம் - தஞ்சை நீதிமன்றத்தில் 6 பேர் சரண்
x
மஜக நிர்வாகி கொல்லப்பட்ட சம்பவம் - தஞ்சை நீதிமன்றத்தில் 6 பேர் சரண் 

வாணியம்பாடியில் மஜக நிர்வாகி  கொல்லப்பட்ட சம்பவத்தில் 6 பேர் தஞ்சை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கடந்த 10ஆம் தேதி மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகி வசீம் அக்ரம் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் 2 பேர் ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதனிடையே 6 பேர் தஞ்சை நீதிமன்றத்தில் நீதிபதி பாரதி முன்பாக சரணடைந்தனர். செங்கல்பட்டை சேர்ந்த அகஸ்டின், பிரவீன்குமார், அஜய், சத்தியசீலன், முனீஸ்வரன், செல்வகுமார் என 6 பேரும் வழக்கறிஞர் வீரசேகருடன் சென்று நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்