லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து - இடிபாடுகளுக்குள் சிக்கிய ஓட்டுநர்

கரூர் அருகே சாலையில் பழுதாகி நின்றிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியதில், மூன்று மணி நேர போராட்டத்துக்கு பிறகு ஓட்டுநர் உயிருடன் மீட்கப்பட்டார்.
லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து - இடிபாடுகளுக்குள் சிக்கிய ஓட்டுநர்
x
கரூரில் உள்ள தனியார் கிரஷரில் எம்.சாண்ட் ஏற்றிய லாரி, தஞ்சாவூர் நோக்கி சென்ற போது, உப்பிடமங்கலம் மேம்பாலத்தில் பழுதாகி நின்றது. அப்போது, திருச்சி நோக்கி சென்ற மற்றொரு லாரி, பழுதாகி நின்றிருந்த லாரியின் பின்புறத்தில் வேகமாக மோதியது. இதில், ஓட்டுநர் சுப்பாராவ் என்பவர் லாரியின் இடிபாடுகளுக்குள் சிக்கி வெளியே வர முடியாமல் தடுமாறினார். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளியணை போலீசார், ஜேசிபி வாகனம் உதவியுடன் மூன்று மணி நேரம் போராடி, ஓட்டுநரை உயிருடன் மீட்டனர். இதில் ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டதால், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்