மூன்றரை வயது சிறுவன் கொலை: கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்த கொடூரம் - சிறுவர்கள் 2 பேரிடம் போலீசார் விசாரணை

சிவகாசியில் மூன்றரை வயது சிறுவனை கிணற்றில் தள்ளி கொடூரமாக கொலை செய்த 2 சிறுவர்களை பிடித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூன்றரை வயது சிறுவன் கொலை: கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்த கொடூரம் - சிறுவர்கள் 2 பேரிடம் போலீசார் விசாரணை
x
சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் திருவள்ளுவர் நகரில் வசிப்பவர் பார்த்திபன். ஓட்டுநராக உள்ளார். இவரின் மனைவி கவி அரசி. இவர்களுக்கு 2 மகன்கள். இதில் 2வது மகன் தீனதயாளனுக்கு மூன்றரை வயது. இவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுவர்களுடன் விளையாடி வந்துள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே சின்ன சின்ன பிரச்சினைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே நேற்று மாலை தீனதயாளனை அழைத்துக் கொண்டு சென்ற 11 மற்றும் 13 வயதான சிறுவர்கள் 2 பேரும் அவரை கிணற்றில் தள்ளி விட்டு வந்துள்ளனர். இதனிடையே மகனை காணாமல் பார்த்திபன் மற்றும் அவரது மனைவியும் தேடி வந்தனர். இன்று காலை அந்த பகுதியில் உள்ள கிணற்றில் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது நடத்திய விசாரணையில் தான், குழந்தையை கொலை செய்தது சிறுவர்கள் 2 பேர் தான் என தெரியவந்தது. இதன்பேரில் போலீசார் சிறுவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்