மருத்துவ துறை - 91 பேருக்கு பணி நியமன ஆணை - கருணை அடிப்படையில் முதல்வர் வழங்கினார்

மருத்துவத் துறையில் இளநிலை உதவியாளர்கள் 91 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
x
சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள மாநில பொது சுகாதாரத்துறை ஆய்வகத்தில் மரபணு பகுப்பாய்வு கூடத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர், இளநிலை உதவியாளர்கள் 91 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார். மருத்துவ கல்வி இயக்ககம் சார்பில் 51 பேர், பொது சுகாதார இயக்குநரகம் சார்பில் 15 பேர், ஊரக நலப்பணிகள் இயக்ககம் சார்பில் 15 பேர், மாநில சுகாதார போக்குவரத்து துறையை சேர்ந்த ஒன்பது பேர், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்ககம் சார்பில் ஒருவர் என, மொத்தம் 91 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்