8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது எப்போது? -அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்

கல்வித்துறை அதிகாரிகளுடனான கூட்டத்துக்குப் பிறகு,எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என, அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
x
கல்வித்துறை அதிகாரிகளுடனான கூட்டத்துக்குப் பிறகு, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். சென்னை கோடம்பாக்கத்தில் தனியார் உடற் பயிற்சி கூடத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், உடற் பயிற்சிக்கு மாணவர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, கேட்டுக்கொண்டார். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்ட போராட்டத்தில் திமுக வெற்றி பெறும் எனவும், நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை பாஜக தவிர அனைத்து கட்சிகளும் வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்