பேருந்தில் பையை தவறவிட்ட பெண் - 15 கிலோ மீட்டர் பேருந்தை பின் தொடர்ந்து பணம், நகையை மீட்ட காவலர்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த பெண் ஒருவர் பேருந்தில் தவறவிட்ட நகை மற்றும் பணத்தை உடனடியாக மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
x
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த பெண் ஒருவர் பேருந்தில் தவறவிட்ட நகை மற்றும் பணத்தை உடனடியாக மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர். திருப்புவனத்தை சேர்ந்த பெண் பயணி ஒருவர் தனது கைப்பையை பேருந்தில் தவறவிட்டுள்ளார். இது குறித்து பணியில் இருந்த காவலர் சீனிவாசனிடம் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து விரைந்து செயல்பட்ட சீனிவாசன் சுமார் 15 கிலோ மீட்டர் பேருந்தை பின் தொடர்ந்து சென்று கைப்பையை மீட்டு அந்த பெண்ணிடம் ஒப்படைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்