மாற்று திறனாளிகளுக்கு வசதிகள் - அரசுக்கு உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கட்டிடங்களிலும், அடுத்த ஆண்டிற்குள் மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாற்று திறனாளிகளுக்கு வசதிகள் - அரசுக்கு உத்தரவு
x
மாற்று திறனாளிகளுக்கு வசதிகள் - அரசுக்கு உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கட்டிடங்களிலும், அடுத்த ஆண்டிற்குள்  மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்  என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது குறித்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் முத்துகுமார், அனைத்து அரசு கட்டிடங்களிலும், அடுத்த ஆண்டிற்குள்  மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கபட்டுள்ளதாக குறிப்பிட்டார்.அடுத்த ஆண்டில் மாற்றுதிறனாளிகள் அணுக முடியாத அளவிற்கு எந்த கட்டிடங்களும் இருக்காது என்று அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வசதிகளை அடுத்த ஆண்டிற்கு ஏற்படுத்தவேண்டும் எனவும்,தவறினால் சம்மந்தபட்ட துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டி வரும் எனக் கூறி,  வழக்கை முடித்து வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்