9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் எப்போது? - மாலை மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை இன்று மாலை மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
x
9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, தேர்தலுக்கான நேரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வாக்குச்சாவடிகளை அமைப்பதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் இன்று மாலை 5 மணிக்கு செய்தியாளர் சந்திப்பின்போது, 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெறும் என்பது தொடர்பாக அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்