தொடர்ந்து பெய்து வரும் மழை: முழு கொள்ளளவை எட்டுகிறது கே.ஆர்.பி அணை

தொடர் மழையின் காரணமாக கிருஷ்ணகிரி கேஆர்பி அணை வேகமாக நிரம்பி வருவதால், 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழை: முழு கொள்ளளவை எட்டுகிறது கே.ஆர்.பி அணை
x
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கிருஷ்ணகிரி அருகே கேஆர்பி அணை கட்டப்பட்டுள்ளது. 52 அடி உயரம் கொண்ட இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்துள்ளது. இதனால் தற்போது நீர்மட்டம் 50 அடியை எட்டி உள்ளது. தொடர்ந்து மழை மற்றும் நீர் வரத்து இருக்கும் பட்சத்தில் ஓரிரு தினங்களில் கேஆர்பி அணை அதன் முழு கொள்ளளவான 52 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேஆர்பி அணையில் இருந்து தண்ணீர்  செல்லும் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்