ரயில்வே உணவகம் குத்தகை மோசடி : ரயில்வே ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிவு

ரயில்வேயில் உணவகம் குத்தகை உரிமம் பெற்றுத்தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த ரயில்வே ஒப்பந்ததாரர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ரயில்வே உணவகம் குத்தகை மோசடி : ரயில்வே ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிவு
x
சென்னை பெரியமேட்டை சேர்ந்தவர் பெஞ்சமின் ஆரோக்கிய ராஜ், ரயில்வேயில் உணவகம் நடத்தி வரும்  முஸ்தபா என்பவரிடம், ரயில்வே உணவகம் குத்தகை பெற்றுதருமாறு 2 கோடி ரூபாயை ஆரோக்கிய ராஜ் கொடுத்துள்ளார். ஆனால் கடந்த இரண்டு வருடமாக உணவகம் குத்தகை வாங்கி தராமல் ஏமாற்றியுள்ளார். இது தொடர்பாக பணத்தை திருப்பி கேட்கும் போது ஆபாசமாக திட்டியுள்ளார். இதனையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஆரோக்கிய ராஜ் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில்  முஸ்தபா மற்றும் அவரது மனைவி, மகன் ஆகியோர்  மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்