ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் மக்கள்.. மாற்றுத்திறனாளிகளுக்காக நடமாடும் முகாம்கள்

ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் மக்கள்.. மாற்றுத்திறனாளிகளுக்காக நடமாடும் முகாம்கள்
x
ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் மக்கள்.. மாற்றுத்திறனாளிகளுக்காக நடமாடும் முகாம்கள்  

தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் மையங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. கோவையில் காலை 7 மணிக்கு தொடங்கிய முகாமில் மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசியை செலுத்தி கொண்டனர். முகாம்களுக்கு வர முடியாத முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று தடுப்பூசி செலுத்த நடமாடும் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  இது தொடர்பாக மாநகராட்சி சார்பில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள 0422-2302323, 9750554321 என்ற தொலைப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  சமூக உள நல மையம் சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில் தடுப்பூசியை ஆதரிப்பதாக பொதுமக்கள் கையெழுத்திட்டு வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்