நீட் தேர்வு எழுத இருந்த மாணவன் தற்கொலை - இன்று தேர்வு நடைபெறும் நிலையில் தற்கொலை

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நீட் தேர்வு எழுத இருந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வு எழுத இருந்த மாணவன் தற்கொலை - இன்று தேர்வு நடைபெறும் நிலையில் தற்கொலை
x
மேட்டூர் அருகே உள்ள கூழையூர் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் என்ற விவசாயியின் மகன் தனுஷ் என்பவர், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 2019ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்  பெற்றிருந்த நிலையில், மருத்துவம் படிக்க விரும்பிய தனுஷ், கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வை எழுதியுள்ளார். இதில் தோல்வியடைந்த‌ தனுஷ், இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தார். மேச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் நீட் தேர்வு எழுத அவருக்கு நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது. இந்நிலையில், நேற்று தனது நண்பர்களிடம் பேசிய தனுஷ், இந்த முறையும் நீட் தேர்வில் தோல்வி அடைந்தால், தனது மருத்துவ கனவு கலைந்துவிடும் என கூறியதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு தனுஷ் திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்ட அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். நீட் தேர்வு எழுத இருந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்