சுகேஷின் கூட்டாளிகள் 4 பேர் கைதான சம்பவம் - டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தொடர்பான 200 கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைதான அவரது கூட்டாளிகள் நான்கு பேரிடம் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுகேஷின் கூட்டாளிகள் 4 பேர் கைதான சம்பவம்  - டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை
x
இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தர லஞ்சம், தொழிலதிபருக்கு ஜாமின் பெற்று தர தொழிலதிபரின் மனைவியிடம் லஞ்சம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இடைத்தரகர் சுகாஷ் சந்திரசேகர் மீது  200 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

அதேநேரம் சுகேஷின் காதலி லீனா மரியா பால் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவருக்கு நெருக்கமான கூட்டாளிகள் நான்கு பேரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 

சுகேஷ் சந்திரசேகரின் நெருங்கிய கூட்டாளிகளான கமலேஷ் கோத்தாரி, அருண் முத்து, சாமுவேல் மற்றும் மோகன்ராஜ் உள்ளிட்ட 4 பேரையும் சென்னையில் வைத்து டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இவர்கள் 4 பேருமே சென்னையை சேர்ந்தவர்கள். 

இதில் கமலேஷ் கோத்தாரி ஹவாலா இடைத்தரகராக செயல்பட்டு வந்தவர். தமது சட்டவிரோத ஹவாலா பரிமாற்றத்தின் மூலம் சுகேஷ் சந்திரசேகர் சென்னையில் பங்களா வாங்குவதற்கு கமலேஷ் கோத்தாரி உதவி புரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் மோசடி பணத்தின் மூலம் பல்வேறு சொகுசு கார்கள் மற்றும் பங்களாவை வாங்கித் தரும் வேலை கமலேஷ் கோத்தாரிக்கு பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

சுகேஷ் சந்திரசேகர் சிறையில் இருந்தவாறே பல்வேறு ஹவாலா பரிமாற்றங்களை செய்துள்ளார். அதற்கு உடந்தையாக கமலேஷ் கோத்தாரி இருந்ததும் தெரியவந்துள்ளது. இவரின் தொடர்புகள் மூலமாக சட்டவிரோதமாக பல்வேறு நாடுகளுக்கும் ஹவாலா பணம் மாற்றப்பட்டுள்ளது. 

மற்றொருவரான சாமுவேல், நடிகை லீனா மரியாவின் மேலாளராக பணிபுரிந்து வந்தவர். 

மோசடியில் கிடைத்த பணத்தின் மூலம் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் லீனா மரியா பால் பல்வேறு சொகுசு கார்களை வாங்குவதற்கு உதவி புரிந்ததாக அருண் முத்து என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள மற்றொருவரான மோகன்ராஜ், சுகேஷ் சந்திரசேகரின் நீண்டகால வழக்கறிஞர்.

2014 ஆம் ஆண்டு முதல் சுகேஷ் சந்திரசேகரின் வழக்கறிஞராக இருக்கும் மோகன்ராஜ், சுகேஷ் சந்திரசேகரிடம்  இருந்து பணத்தைப் பெற்று பின்னர் அது பல்வேறு வழிகளில் மூலம் நடிகை லீனா மரியாவுக்கு மாற்றியுள்ளார் எனக் கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்