புகார்கள் வரும் கட்டிடங்கள் ஆய்வு செய்யப்படும் - அமைச்சர் முத்துசாமி

சென்னை கேகே நகரில் வீட்டுவசதி வாரியம் சார்பில் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ள குடியிருப்பின் குறைகளை நிவர்த்தி செய்ய இரண்டு அதிகாரிகளை நியமித்துள்ளதாக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்
புகார்கள் வரும் கட்டிடங்கள் ஆய்வு செய்யப்படும் - அமைச்சர் முத்துசாமி
x
சென்னை கேகே நகரில் வீட்டுவசதி வாரியம் சார்பில் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ள குடியிருப்பின் குறைகளை நிவர்த்தி செய்ய இரண்டு அதிகாரிகளை நியமித்துள்ளதாக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். கேகே நகரில் உள்ள பிருந்தாவனம் டவர்சில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பு கட்டிடத்தை ஆய்வு செய்த அமைச்சர் முத்துசாமி அங்கிருப்போரின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், புகார்கள் எழுந்த குடியிருப்பு கட்டங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும், முறைகேட்டில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்