நகை பட்டறை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு - தொழில் போட்டியால் கொலை முயற்சி

தொழில் போட்டி காரணமாக நகை பட்டறை உரிமையாளரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நகை பட்டறை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு - தொழில் போட்டியால் கொலை முயற்சி
x
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தை சேர்ந்த அச்சுதன், நகைப்பட்டறை வைத்துள்ளார்.  இவர், பிரபல நகை கடைகளுக்கு நகைகளை செய்து கொடுத்து வருகிறார். இவர் கடந்த 4 ஆம் தேதி கோனிமேடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, 3 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. அச்சுதனை போலீசார் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கொளத்தூரில் ஜெயபாபு என்பவரின் நகைப்பட்டறையில் அச்சுதன் வேலை பார்த்து வந்துள்ளார். பிறகு சொந்தமாக செங்குன்றத்தில் அச்சுதன் நகைப்பட்டறை  வைத்துள்ளார். இதனால் ஜெயபாபுவிற்கு ஆர்டர்கள் குறைந்ததால், அச்சுதனை 21 லட்சம் ரூபாய் கொடுத்து கூலிப்படை வைத்து கொலை செய்ய திட்டமிட்டது, விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து நகைப்பட்டறை உரிமையாளர் ஜெயபாபு உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 6 லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர். தன்னிடம் வேலை பார்த்தவர் தொழிலில் போட்டியாக வந்ததால், முன்னாள் உரிமையாளர் கூலிப்படை வைத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம், செங்குன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்