"ஃபோர்டு தொழிற்சாலை மூடல்; 38 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிப்பு" - ராமதாஸ்

ஃபோர்டு தொழிற்சாலை மூடப்படுவதால் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதால், ஆலை மூடப்படுவதை தடுக்க வேண்டும் என பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்
ஃபோர்டு தொழிற்சாலை மூடல்; 38 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிப்பு - ராமதாஸ்
x
ஃபோர்டு தொழிற்சாலை மூடப்படுவதால் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதால், ஆலை மூடப்படுவதை தடுக்க வேண்டும் என பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ராமதாஸ், சென்னை மற்றும் குஜராத்திலும் செயல்பட்டு வரும் ஃபோர்டு நிறுவன ஆலைகளை மூடும் அறிவிப்பு வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னையில் ஃபோர்டு ஆலையை தொடர்ந்து இயங்கச் செய்வதற்கான சாத்தியக் கூறுகள்  குறித்து அந்த நிறுவனத்துடன் தமிழக தொழில்துறை அதிகாரிகள் பேச்சு நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்