3 மாதத்தில் காவல் ஆணையம் அமைக்க உத்தரவு

தமிழகத்தில் உள்ள காவல்துறையினரின் குறைகளை கேட்கவும், அதற்கு தீர்வு காணவும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் 3 மாதங்களில் காவல் ஆணையத்தை அமைக்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
3 மாதத்தில் காவல் ஆணையம் அமைக்க உத்தரவு
x
கரூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமைக் காவலர் மாசிலாமணி, தாக்கல் செய்த பொதுநல மனுவில், காவல்துறையில் போலீசாரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், காலிப் பணியிடங்களை நிரப்பவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மனுவை மீதான விசாரணைகள் முடிந்த நிலையில், போலீசாரின் குறைகளை கேட்கவும், தீர்வு காணவும் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் காவல் ஆணையத்தை 3 மாதத்தில் அமைக்க வேண்டும் என்றும், அதில் மனநல மருத்துவர்கள்,  உளவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் இடம்பெற வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் காலங்களில் போலீசாருக்கு 8 மணி நேர வேலையை முறையாக பின்பற்ற வேண்டும், சுழற்சி முறையில் போலீசார் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்