வேளாங்கண்ணி பேராலய திருவிழா நிறைவு- பேராலயத்தில் கொடி இறக்கம்

நாகை வேளாங்கண்ணி பேராலயத்தின் ஆண்டுத் திருவிழா, கொடியிறக்கத்துடன் நிறைவடைந்தது.
வேளாங்கண்ணி பேராலய திருவிழா நிறைவு- பேராலயத்தில் கொடி இறக்கம்
x
உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுத் திருவிழா, கடந்த மாதம் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில், கொரோனா காரணமாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில், விழாவின் இறுதி நாளான நேற்று கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேராலய பங்குத் தந்தை அற்புதராஜ் தலைமையில் நன்றி அறிவிப்பு ஜெபம் செய்து, கொடி இறக்கப்பட்டது. பின்னர் பேராலயத்தில் தமி்ழில் திருப்பலி நடைபெற்ற நிலையில், இந்த நிகழ்ச்சியில் பாதிரியார்கள் உள்ளிட்டோர் மட்டுமே பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்