திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி: பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் புகார்
காதல் திருமணம் செய்தவர்களை பெற்றோர்கள் மிரட்டுவதாகவும் உரிய பாதுகாப்பு தருமாறு காவல் நிலையத்தில் இளம் ஜோடி புகார் அளித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது உறவுக்கார பெண்ணை காதலித்துள்ளார். தினேஷ் குமாருக்கு வயது அதிகமாக உள்ளதை காரணம் காட்டி இருவரின் காதலுக்கும் பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்த நிலையில் வீட்டில் இருந்து வெளியேறிய காதல் ஜோடிகள் முகப்பேரில் உள்ள கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனையடுத்து அண்ணாநகரில் உள்ள நண்பர்கள் வீட்டில் தங்கியுள்ளனர். அப்போது பெண் வீட்டார் சார்பாக செல் போன் மூலமாக தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாகவும் எனவே பாதுகாப்பு தருமாறு திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து இருதரப்பினரையும் காவல்துறையினர் அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story