அங்கன்வாடி மையங்களில் தணிக்கை பணி: தணிக்கை செய்ய லஞ்சமா?- வாட்ஸ்-அப் ஆடியோவால் அதிர்ச்சி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அங்கன்வாடி மையங்களில் தணிக்கை செய்ய, லஞ்சம் வாங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
அங்கன்வாடி மையங்களில் தணிக்கை பணி: தணிக்கை செய்ய லஞ்சமா?- வாட்ஸ்-அப் ஆடியோவால் அதிர்ச்சி
x
வையம்பட்டி ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் 102 அங்கன்வாடி மையங்களில் தற்போது தணிக்கை பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தணிக்கை பணி அதிகாரிகளுக்கு லஞ்சம் தரப்படுவதாக புகார் எழுந்து உள்ளது. தணிக்கை அதிகாரிகளுக்கு 700 ரூபாய் லஞ்சம் வழங்க வேண்டும் என்று வாட்ஸ்-அப்பில் ஆடியோ ஒன்று வெளியாகி உள்ள நிலையில், லஞ்சம் வாங்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அங்கன்வாடி ஊழியர்கள் கூறி உள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்