ஒரே நேரத்தில் குவிந்த பயணிகளால் கொரோனா பரவும் அபாயம்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை விமான நிலைய குடியுரிமை சோதனை கவுன்டர்களில் குவிந்த பயணிகளால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது. தோகா, சார்ஜா மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் இருந்து 4 விமானங்கள் அடுத்தடுத்து சென்னை வந்தன.
ஒரே நேரத்தில் குவிந்த பயணிகளால் கொரோனா பரவும் அபாயம்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
x
இதில் வந்த பயணிகள் அனைவரும் ஒரே நேரத்தில், பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சோதனை செய்யும், குடியுரிமை கவுன்டர்களில் முண்டியத்துக்கொண்டு வரிசையில் நின்றனர்.  இதனால், விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியதுடன்,  கொரோனா பரவும் சூழல் ஏற்பட்டது. பின்னர்,  3 கவுன்டர்கள் செயல்பட்டு வந்த நிலையில் கூடுதலாக 2  கவுன்டர்களை திறந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். ஆனால், 6 கவுன்டர்களில் 3ல் பரிசோதனை செய்யப்படாததால், பயணிகள் முண்டியடித்துக்கொண்டு இருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்