கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச்செயலாளர் இறையன்பு ஆலோசனை

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச்செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தினார்.
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச்செயலாளர் இறையன்பு ஆலோசனை
x
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், தலைமைச்செயலாளர் இறையன்பு, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, கொரோனா பரவலை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில், வரும் 12ஆம் தேதி மாபெரும் தடுப்பூசி முகாம் அமைப்பது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து கேரளாவை ஒட்டிய மாவட்டங்களில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து இறையன்பு கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில், சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன், டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் கலந்து கொண்டனர். 


Next Story

மேலும் செய்திகள்