செப். 12-ல் மெகா தடுப்பூசி முகாம் - "25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு"

சிறப்பு தடுப்பூசி முகாம் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு, தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் அனுப்பி உள்ளார்.
செப். 12-ல் மெகா தடுப்பூசி முகாம் - 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு
x
சிறப்பு தடுப்பூசி முகாம் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு, தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் அனுப்பி உள்ளார். வரும் 12ஆம் தேதி, தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ள நிலையில், ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதற்கான பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் சுமார் 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், மலைவாழ் பகுதிகள், கேரளா, கர்நாடகா எல்லையோர மாவட்டங்களில் திட்டமிட்டபடி கூடுதல் தடுப்பூசிகளை செலுத்த அறிவுறுத்தி உள்ளார். அத்துடன், தடுப்பூசி முகாம்களுக்கான ஆட்கள் தேவையை தனியார் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள், தொண்டு நிறுவன உதவியுடன் மேற்கொள்ளவும் வலியுறுத்தியுள்ளார்.

 

Next Story

மேலும் செய்திகள்