சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான சொத்து முடக்கம் - வருமான வரித்துறை நடவடிக்கை

சசிகலாவுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை முடக்கியுள்ளது.
சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான சொத்து முடக்கம் - வருமான வரித்துறை நடவடிக்கை
x
சசிகலாவுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை முடக்கியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே பையனூர் பகுதியில் சசிகலாவுக்கு சொந்தமாக 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் உள்ளன. 49 ஏக்கர் மதிப்பிலான இந்த சொத்துகளை பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை வரித்துறை முடக்கி உள்ளது. இதுவரை சசிகலாவிற்கு சொந்தமான 2000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. தற்போது பையனூரில் முடக்கப்பட்டுள்ள நிலம் தன்னிடம் இருந்து மிரட்டி வாங்கப்பட்டதாக இசையமைப்பாளர் கங்கை அமரன் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்