"நான் திமுக உறுப்பினர் தான்" - ரவிக்குமார் எம்.பி

திமுக சின்னத்தில் நின்று வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தான் திமுக'வைச் சேர்ந்தவன் என சென்னை உயர் நீதிமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
x
திமுக சின்னத்தில் நின்று வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தான் திமுக'வைச் சேர்ந்தவன் என சென்னை உயர் நீதிமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி பாரிவேந்தர், விடுதலை சிறுத்தைகள் கட்சி ரவிக்குமார் உள்ளிட்டோர் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். ஒரு கட்சியை சார்ந்தவர் வேறு கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் விழுப்புரம்  நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வேட்பு மனு தாக்கலின் போது தான் ஒரு திமுக உறுப்பினர் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் அல்ல எனவும்  தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடைய வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு தான் தொடர முடியுமே தவிர பொது நல வழக்கு தொடர முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்