"விடுதிகளில் ஈழ தமிழர்களுக்கு கூடுதல் இடம்" - தமிழக அரசு

இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கு பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் விடுதிகளிலும் கூடுதலாக ஐந்து இடங்கள் ஒதுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
விடுதிகளில் ஈழ தமிழர்களுக்கு கூடுதல் இடம் - தமிழக அரசு
x
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கொள்கை விளக்க குறிப்பு தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதிகளின் தரத்தினை உயர்த்த 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விடுதிகளில் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கு கூடுதலாக ஐந்து இடங்கள் ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் பிற்படுத்தப்பட்டோரின் கல்வி சார்ந்த திட்டங்களுக்கு 3 ஆயிரத்து 480 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஆய்வு மாணவர்களின் முனைவர் படிப்பிற்கான கல்வி உதவித் தொகை 50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சமாக உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்