அனல் மின் நிலையம்- மின் உற்பத்தி பாதிப்பு: கொதிகலன் கசிவு சரி செய்யப்பட்டது
வல்லூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் கசிவு சரிசெய்யப்பட்டு மீண்டும் 500 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு அனல் மின் நிலையத்தில் உள்ள மூன்று அலகுகளில் தலா 500 மெகாவாட் என ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் 3வது அலகில் கொதிகலனில் கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த அலகில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டதையடுத்து மீண்டும் 500 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
Next Story