மின்இழுவை ரயில் நிலைய அலுவலகம் முற்றுகை: பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
பழனி மலை கோயிலுக்கு செல்லும் மின்இழுவை ரயில் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மின்இழுவை ரயில் நிலைய டிக்கெட் வாங்கும் நுழைவாயிலை மாலை
4 மணிக்கே மூடி விடுவதாகவும், இடைத்தரகர்கள் அதிக பணம் பெற்று கொண்டு அதிகாரிகள் துணையோடு பக்தர்களை பிரதான நுழைவு வாயில் வழியாக அனுமதிப்பதாகவும் பக்தர்கள் குற்றம்சாட்டினர். சம்பந்தப்படவர்கள் மீது கோயில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Next Story