"தமிழகத்திற்கு ஒரு கோடி தடுப்பூசி தேவை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

வரும் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டிற்கு கூடுதலாக ஒரு கோடி தடுப்பூசியை ஒதுக்கீடு செய்யக்கோரி மத்திய அமைச்சருக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார்.
x
கொரோனாவிற்கு எதிர்த்து போரிடுவதற்காக தடுப்பூசி போடுவதில் முனைப்பு காட்டி வருகிறது தமிழ்நாடு அரசு..

இதன் ஒரு பகுதியாக வருகிற 12ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

12ம் தேதி முதல் வாரந்தோறும் இந்த மெகா தடுப்பூசி முகாமை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் திங்கட்கிழமை குறிப்பிட்டிருந்தார்.

Next Story

மேலும் செய்திகள்