ஒரு இளைஞரை காதலித்த 2 பெண்கள் - டாஸ் போட்டு முடிவெடுத்த ஊர் பஞ்சாயத்தினர்

கர்நாடகாவில் 2 பெண்கள் ஒரு இளைஞரை காதலித்து வந்த நிலையில் டாஸ் போட்டு முடிவெடுத்த ஊர் பஞ்சாயத்தினர் வெற்றி பெற்ற பெண்ணை இளைஞருக்கு திருமணம் செய்து வைத்தனர்.
x
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஆலூர் தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 2 இளம்பெண்கள் ஒரே இளைஞரை காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்து வைக்க வேண்டும் என கூறி வந்தனர். அந்த இளைஞரை யார் திருமணம் செய்வது என பலத்த போட்டியும் நிலவி வந்தது. ஆனாலும் யாரும் விட்டுக் கொடுத்து போகாததால் டாஸ் போட்டு முடிவெடுக்க ஊர் பஞ்சாயத்தினர் திட்டமிட்டனர். அதன்படி டாஸ் போட்டதில் ஒரு பெண்ணுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஏமாந்து போன மற்றொரு பெண்ணோ, விஷம் குடித்து இறந்து விடுவேன் என மிரட்டினார். ஆனால் வெற்றி பெற்ற பெண்ணோ அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். ஆனாலும் கோபம் தீராத அந்த பெண் தன் காதலனின் கன்னத்தில் ஒரு அறை கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பினார். இதையடுத்து டாஸில் வென்ற பெண்ணுக்கும் அந்த இளைஞருக்கும் திருமணமும் நடந்தது. கர்நாடகாவில் நடந்த இந்த ருசிகர சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்