"எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர்" - எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை

எழும்பூர் ரயில் நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டுமென சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் சட்டபேரவையில் கோரிக்கை வைத்துள்ளார்.
x
எழும்பூர் ரயில் நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டுமென சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் சட்டபேரவையில் கோரிக்கை வைத்துள்ளார். சட்டத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய  பரந்தாமன்,  பழமை வாய்ந்த எழும்பூர் பகுதியை எழுமூர் என்று பெயர் மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வழக்கறிஞர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் வழங்கப்பட வேண்டும் என்றும் அப்போது அவர் வலியுறுத்தினார். தமிழக மின்சார வாரியம் தங்கமும் மணியுமாக இருக்க வேண்டியது எனவும் அதை பித்தளையும் ஈயமாக மாற்றியது யார் என சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்