"தமிழகம், புதுவையில் மிதமான மழை பெய்யும்" - வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு பருவ காற்று காரணமாக வரும் 11ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுவையில் மிதமான மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
x
தென்மேற்கு பருவ காற்று காரணமாக வரும் 11ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா பகுதிகள், வங்க கடல் பகுதிகள், அரபிக்கடல் பகுதிகளில் வரும் 11ஆம் தேதி வரை பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்