பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் விசாரணை வரும் 14ஆம் தேதி தள்ளி வைப்பு

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி மற்றும் முன்னாள் எஸ்.பி.ஆகியோர் ஆஜராகினர்.
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல்  தொந்தரவு கொடுத்த வழக்கில் விசாரணை வரும் 14ஆம் தேதி தள்ளி வைப்பு
x
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி மற்றும் முன்னாள் எஸ்.பி.ஆகியோர் ஆஜராகினர்.  பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனிடையே வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் முன்னாள் எஸ்.பி. ஆகியோர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். அப்போது 
இந்த வழக்கை நடத்த விழுப்புரம் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணையை வரும் 14ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டார். 



Next Story

மேலும் செய்திகள்