4 மாதங்களுக்கு பிறகு ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது

4 மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது, ஊட்டி மலை ரயில் சேவை...
x
மனதை வருடிச் செல்லும் தென்றல் காற்று, வெண்மேகங்கள் தவிழ்ந்து விளையாடும் மலைப்பகுதி,சலசல என சப்தமிடும் நீரோடைகள், பச்சைப்பசேல் என பரந்து விரிந்த தேயிலை தோட்டங்கள்... இவற்றையெல்லாம் தாண்டி பாறைகளை குடைந்து உருவாக்கப்பட்ட குகைகள் வழியாக தவழ்ந்து செல்லும் போது... ஒரு நிமிடம் தங்களையே  மறந்துவிடுகின்றனர்... சுற்றுலா பயணிகள்... 

ஊர்ந்து செல்லும் மலை ரயில் காண்பதற்கே அற்புதமாக கட்சியளிக்க... அதனுள் விரும்பி பயணிக்கும் சுற்றுலா பயணிகளின் அனுபவம் முற்றிலும் இயற்கையோடு ஒன்றிணைந்தது... மலைகளின் அரசி... சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமி... என உள்ளத்தை கொள்ளை கொண்ட ஊட்டிக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது... இந்த அழகிய மலை ரயில்... 

கடந்த 1899ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி தொடங்கிய இந்த ரயில் சேவை... மலைப்பாதையில் உள்ள 208 வளைவுகளில் வளைந்து நெளிந்து செல்லும் காட்சி... காண்போரை பரவசப்படுத்தும்... மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கு நீராவி ரயில் என்ஜினும் குன்னூரில் இருந்து உதகைக்கு டீசல் என்ஜினும் இயக்கப்பட்டு வருகிறது.. ஆசியாவிலேயே மிக செங்குத்தான இந்த மலை ரயில் பாதை... கடந்த 2005ம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது, யுனெஸ்கோ 

130 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த மலை ரயிலின் பாரம்பரியத்தை எடுத்து கூறும் வகையில், மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி ரயில் நிலையங்களில் அமைந்துள்ளது, நீலகிரி மலை ரயில்வே அருங்காட்சியகம். தற்போது மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு பதிவுடன் முதல் வகுப்புக்கு 600 ரூபாய் கட்டணமும், இரண்டாம் வகுப்புக்கு 295 ரூபாய் கட்டணமும், 

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு முதல் வகுப்பு 445 ரூபாயும், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு இரண்டாம் வகுப்பு190 ரூபாயும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த 4 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட மலை ரயில் சேவை, மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதை அடுத்து, இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை ரசித்தப்படி பயணிக்க தொடங்கிவிட்டனர், சுற்றுலா பயணிகள்...

Next Story

மேலும் செய்திகள்