நெடுஞ்சாலையில் தீ பிடித்து எரிந்த லாரி - உயிர் தப்பிய ஓட்டுனர்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தமிழக-கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெடுஞ்சாலையில் தீ பிடித்து எரிந்த லாரி - உயிர் தப்பிய ஓட்டுனர்
x
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தமிழக-கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிமெண்ட் பாரம் ஏற்றிகொண்டு கர்நாடகா மாநிலம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி திடீரென டயர் வெடித்து தீப்பிடித்து எரிய தொடங்கியது. லாரியில் தீ பிடித்து எரிவதை கண்ட ஓட்டுநர் லாரியில் இருந்து குதித்து உயிர்தப்பினார். இதுகுறித்து உடனடியாக தீயணைப்புத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து தீ அணைக்க முயற்சி மேற்கொண்டனர். விபத்து காரணமாக  சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்