தானியங்கி பட்டா மாற்றம் திட்டம் - "கிராமங்களில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது"

சென்னை திருவல்லிக்கேணி, மாம்பலம் வட்டங்களில் சோதனை முறையில் தானியங்கி பட்டா மாற்றம் திட்டம் தொடங்கப்பட்டிருப்பதாக பத்திரப்பதிவுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தானியங்கி பட்டா மாற்றம் திட்டம் - கிராமங்களில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது
x
சென்னை திருவல்லிக்கேணி, மாம்பலம் வட்டங்களில் சோதனை முறையில் தானியங்கி பட்டா மாற்றம் திட்டம் தொடங்கப்பட்டிருப்பதாக
பத்திரப்பதிவுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவுத்துறையின் மென்பொருள் "ஸ்டார் 2.0 மற்றும் வருவாய்த்துறையின் மென்பொருள் தமிழ்நிலம் ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டிருப்பதால் கிராமங்களில் தற்போது தானியங்கி பட்டா மாற்றம் முறை  நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நகரங்களை பொறுத்தவரையில் "ஸ்டார் 2.0 மற்றும் தமிழ்நிலம் மென்பொருட்களை இணைக்கும் பணி நிறைவடைந்து திருவல்லிக்கேணி, மாம்பலம் வட்டங்களில் சோதனை முறையில் தொடங்கப்பட்டிருப்பதாகவும், அனுபவ அடிப்படையில் இந்த திட்டம் மாநிலம் முழுவதும்  நகர்ப்புற பகுதிகளுக்கு விரிவுப்படுத்தப்படும் என்றும் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்