காவலர் குடியிருப்பில் நடந்த சம்பவம் - நாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கொடூரம்

விழுப்புரம் காவலர் குடியிருப்பில் நாயை துப்பாக்கியால் சுட்டு கொன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
காவலர் குடியிருப்பில் நடந்த சம்பவம் - நாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கொடூரம்
x
விழுப்புரம் சாலாமேடு அருகே உள்ள  காவலர் குடியிருப்பில் நேற்று மாலை திடீரென பட்டாசு வெடித்தது போல சத்தம் கேட்டது. உடனே அங்கு சென்ற போது நாய் ஒன்றை 2 பேர் சேர்ந்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அந்த நாய் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தது. காவலர் குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிந்த அந்த நாயை கொன்ற 2 பேரும் தப்பி ஓடினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே அந்த பகுதியில் சைக்கிள் கடை நடத்தி வந்த கனகராஜ்  இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. தன்னுடைய வீட்டில் வளர்த்து வந்த கோழி, ஆடுகளை தெரு நாய் கடித்து குதறியதால் நரிக்குறவரை வரவழைத்து நாயை சுட்டுக் கொன்றதாக தெரிவித்தார். இதையடுத்து கனகராஜ் மற்றும் நரிக்குறவர் ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்