பண டெபாசிட் இயந்திரத்தில் கொள்ளை - சிபிஐக்கு மாற்ற தமிழக அரசுக்கு காவல்துறை பரிந்துரை

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை வழக்குகளை சிபிஐக்கு மாற்றக்கோரி சென்னை காவல்துறை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
பண டெபாசிட் இயந்திரத்தில் கொள்ளை - சிபிஐக்கு மாற்ற தமிழக அரசுக்கு காவல்துறை பரிந்துரை
x
சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள எஸ்பிஐ வங்கியின் கேஷ் டெபாசிட் இயந்திரங்களை குறிவைத்து கடந்த ஜூன் மாதம் மோசடி கும்பல் கைவரிசை காட்டியது. இந்த சம்பவத்தில் ஹரியானா மாநிலம் மேவாட்டை சேர்ந்த ஒரு கும்பல் ஈடுபட்டது உறுதியான நிலையில் போலீசார் அவர்களை கைது செய்தனர். அதேநேரம் இந்த கும்பல் பல மாநிலங்களிலும் கைவரிசை காட்டியது உறுதியான நிலையில் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி சென்னை காவல்துறை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதனை தமிழக அரசின் உள்துறையானது விரைவில் மத்திய உள்துறைக்கு அனுப்ப உள்ளதாக கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்