ஊட்டி மலை ரயில் சேவை தொடங்கியது: குழந்தைகளுடன், ஏராளமானோர் உற்சாக பயணம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் சேவை 4 மாதங்களுக்கு பிறகு இன்று துவங்கியது.
ஊட்டி மலை ரயில் சேவை தொடங்கியது: குழந்தைகளுடன், ஏராளமானோர் உற்சாக பயணம்
x
கொரோனா பரவலால், அனைத்து பொதுப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்ட நிலையில், வரலாற்று சிறப்புமிக்க ஊட்டி மலை ரயிலும் நிறுத்தப்பட்டது. ஏப்ரல் மாதம் நிறுத்தப்பட்ட சேவை, தற்போது, கொரோனா குறைந்து வருவதை அடுத்து, இன்று மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகத்தின் முடிவின்படி, பயணிகள் முன்பதிவுடன் இன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து, ஊட்டிக்கு இயக்கப்பட்டது. 
காலை 7.10 மணிக்கு மலை ரயில் புறப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு இரண்டாம் வகுப்பு கட்டணமாக 190 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயணிகள் உற்சாக பயணம் மேற்கொண்டனர். 


Next Story

மேலும் செய்திகள்