கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: 8 நபர்களுக்கு சம்மன்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்குகளில் கேரளாவில் உள்ள 8 நபர்களுக்கு நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: 8 நபர்களுக்கு சம்மன்
x
நீலகிரி மாவட்டம் கொடநாடு வழக்கு தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், தீபு உள்ளிட்ட10 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 9 பேர் ஜாமினில் உள்ளனர். வாளையார் மனோஜ் மட்டும் குன்னூர் சிறையில் உள்ளார்.  தற்போது கேரளாவில் உள்ள தீபு, ஜம்ஸீர் அலி, சதீஸன், பிஜின், உதயன், உள்ளிட்ட 8 குற்றவாளிகளுக்கு, இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக காவல்துறை சார்பாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதில், 5 தனிப்படையினர் குற்றவாளிகளிடம் தனித்தனியாக விசாரனை மேற்கொள்ள உள்ளனர். இதனால் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்