திருப்பத்தூர் : வீடு வாடகைக்கு எடுத்து கள்ளச்சாராயம் விற்பனை

திருப்பத்தூர் அருகே தனி வீடு வாடகைக்கு எடுத்து கள்ளச்சாராயம் விற்பனை செய்த நிலையில் அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருப்பத்தூர் : வீடு வாடகைக்கு எடுத்து கள்ளச்சாராயம் விற்பனை
x
திருப்பத்தூர் அருகே தனி வீடு வாடகைக்கு எடுத்து கள்ளச்சாராயம் விற்பனை செய்த நிலையில் அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். வாணியம்பாடி அடுத்த மேட்டுபாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்து கள்ளச்சாராயம் விற்பது உறுதியானது. இதையடுத்து வீட்டின் உள்ளே இருந்த 500 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் விற்பனை செய்த நபரை தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்