சாத்தான்குளம் தந்தை,மகன் கொலை வழக்கு விசாரணை செப்.15க்கு ஒத்திவைப்பு

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் பென்னிக்ஸ்சின் நண்பரிடம் குறுக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், வழக்கு விசாரணை செப்டம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் தந்தை,மகன் கொலை வழக்கு விசாரணை செப்.15க்கு ஒத்திவைப்பு
x
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில்  பென்னிக்ஸ்சின் நண்பரிடம் குறுக்கு விசாரணை நடைபெற்ற நிலையில்,  வழக்கு விசாரணை செப்டம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த  தந்தை மகனான ஜெயராஜ், பென்னிக்கிஸ் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இருவர் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர்  ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்நிலையில் வழக்கு விசாரணை மதுரை மாவட்ட  முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது கைது செய்யப்பட்ட 9பேரும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். முன்னதாக பென்னிக்கிஸின் நண்பரான  சங்கரலிங்கத்திடம் குற்றம்சாட்டபட்டவர்கள் தரப்பிலும் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி  வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்