கொடநாடு வழக்கில் சூடுபிடிக்கும் விசாரணை - விசாரணை முகாமான பழைய எஸ்.பி. அலுவலகம்

கொடநாடு வழக்கை விசாரிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் உதகையில் உள்ள பழைய எஸ்.பி.அலுவலகம் விசாரணை முகாமாக மாற்றப்பட்டுள்ளது.
கொடநாடு வழக்கில் சூடுபிடிக்கும் விசாரணை - விசாரணை முகாமான பழைய எஸ்.பி. அலுவலகம்
x
கொடநாடு வழக்கு விசாரணையானது நீதிமன்றங்களில் நடந்து வரும் நிலையில் இதுதொடர்பாக விசாரணை நடத்த முதலில் ஏடிஎஸ்பி தலைமையில் ஒரு தனிப்படையும், அதன்பிறகு 4 என மொத்தம் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் வழக்குகளை விசாரிப்பதற்காக நீலகிரி மாவட்ட வனத்துறை அலுவலகம் அருகே செயல்பட்டு வந்த பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகமானது தற்காலிக முகாம் அலுவலகமாக மாற்றபட்டுட்டுள்ளது. வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கியவர்கள் என அனைவரிடமும் அடுத்தடுத்து விசாரணை மேற்கொள்ள தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்