50 விழுக்காடு மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி - உத்தரவை மீறுகிறதா தனியார் பள்ளிகள்?
50 விழுக்காடு மாணவர்களை மட்டுமே பள்ளிக்கு அழைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில், ஒரு சில தனியார் பள்ளிகள் அதனை மீறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஒன்றாம் தேதி ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனாலும் 50 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு அழைக்கப்பட வேண்டும் என்றும் நேரடி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டாலும் ஆன்-லைன் வழிக் கல்வித் திட்டமும் தொடர வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது. ஆனால் ஒரு சில தனியார் பள்ளிகள் இதனை மீறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Next Story