புதுநத்தம் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்து - சம்பவ இடத்தில் என்ஐடி குழு ஆய்வு

மதுரையில் மேம்பாலம் இடிந்து விழுந்த இடத்தில் திருச்சி என்ஐடி குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
புதுநத்தம் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்து - சம்பவ இடத்தில் என்ஐடி குழு ஆய்வு
x
கடந்த 28ஆம் தேதி மதுரை புதுநத்தம் சாலையில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக இதுவரை மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், விபத்திற்கான காரணம் குறித்து திருச்சி என்ஐடி பேராசிரியர் பாஸ்கர் தலைமையிலான குழு ஆய்வு செய்தது. தேசிய நெடுஞ்சாலை துறை தலைமையிட அதிகாரிகள்  இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.ஒப்பந்த நிறுவனத்தார், திட்ட பொறியாளர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்திய பிறகு விரைவில் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும் என அந்த குழுவினர் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்