பேத்தியிடம் அத்துமீறிய தாத்தா - கருக்கலைப்பு செய்த கொடூரம்

கள்ளக்குறிச்சியில் பேத்தியிடம் அத்துமீறிய தாத்தா உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பேத்தியிடம் அத்துமீறிய தாத்தா - கருக்கலைப்பு செய்த கொடூரம்
x
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 70 வயதான முதியவர் தன் மகள் மற்றும் 2 பேத்திகளுடன் வசித்து வந்தார். இதில் 15 வயதான பேத்திக்கு கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார் தாத்தா. இதில் அந்த சிறுமி கர்ப்பமாகவே, அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலியரின் உதவியோடு கருக்கலைப்பும்  செய்துள்ளார். இதுதொடர்பான தகவல் வெளியான நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தாத்தா, ஓய்வு பெற்ற செவிலியர் ராஜாமணி உட்பட 3 பேரை கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்