ஆன்லைன் ரம்மி தடை சட்டம் ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் ஆன்-லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆன்லைன் ரம்மி தடை சட்டம் ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்
x
ஆன்-லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன
வழக்கில் இருதரப்பு வாதங்கள் முடிந்து இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், தமிழக அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டம், அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என தெரிவித்தனர்.

தடைக்கான போதுமான காரணங்களை விளக்கவில்லை எனக்கூறி சட்டத்தை ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

உரிய முறைப்படுத்தும் விதிகள் இல்லாமல் ஆன்-லைன் விளையாட்டுக்களுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், 

உரிய விதிகளுடன் புதிய சட்டம் கொண்டு வர அரசுக்கு எந்த தடையும் இல்லை என தீர்ப்பில் குறிப்பிட்டனர்

Next Story

மேலும் செய்திகள்