"புதுக்கோட்டையில் தேவைப்பட்டால் மீண்டும் மினி ஊரடங்கு" - ஆட்சியர் கவிதா ராமு பேட்டி | Pudukkottai
புதுக்கோட்டையில் தேவைப்பட்டால் மீண்டும் மினி ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்
புதிய பேருந்து நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சார இயக்கத்தைத் துவக்கி வைத்த அவர், செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறினார். மேலும், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார். முன்னதாக, விழிப்புணர்வு பிரச்சார இயக்கத்தில் நடைபெற்ற மகளிர் சுய குழுவினரின் நடன நிகழ்ச்சியை ஆர்வத்துடன் கண்டு களித்த ஆட்சியர், தனது செல்போனில் அதைப் பதிவு செய்து கொண்டார்.
Next Story