இன்று தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா - கருணாநிதியின் உருவப்படம் இன்று திறப்பு : விழாவில் பங்கேற்கிறார் குடியரசு தலைவர்

5 நாள் பயணமாக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தனிவிமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
x
சென்னை வந்த குடியரசு தலைவர், பலத்த பாதுகாப்புடன் காரில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்றார். அங்கிருந்தபடி மாலை 5 மணிக்கு தலைமைச்செயலகம் வரும் அவரை ஆளுநர் பன்வாரிலால், சபாநாயகர் அப்பாவு ஆகியோர் வரவேற்று சட்டமன்ற வளாகத்திற்கு அழைத்து செல்கின்றனர். இதனையடுத்து, சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார். இதையொட்டி தலைமைச்செயலகம் வாழைமரங்கள், தென்னை ஓலைகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் வருகை, சட்டமன்ற நூற்றாண்டு விழாவையொட்டி, தலைமைச்செயலகம் விழாக்கோலம் பூண்டுள்ளது. சென்னை மாநகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்