தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு - எல்லை தாண்டி வந்ததால் சுட்டதாக தகவல்

நாகையைச் சேர்ந்த பத்து மீனவர்கள், கோடியக்கரைக்கு தென்கிழக்கே 5 நாட்டிக்கல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
x
நாகையைச் சேர்ந்த பத்து மீனவர்கள், கோடியக்கரைக்கு தென்கிழக்கே 5 நாட்டிக்கல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படையினர் திடீரென தமிழக மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் கலைச்செல்வன் என்கிற மீனவர் தலையில் குண்டு பாய்ந்து பலத்த காயம் அடைந்தார். அவசர அவசரமாக கரை திரும்பிய மீனவர்கள், காயம் அடைந்தவரை நாகை மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படை இது போன்று தாக்குதலில் ஈடுபடுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்